‘கொரோனா தடுப்பு பொறிமுறையை தோல்வியடைய விடமாட்டோம்’

” கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும்  பொறிமுறை தோல்வியடையவில்லை.அவ்வாறு தோல்வியடைய விடவும்மாட்டோம்.எந்தவொரு தகவலையும் நாம் மறைக்கவும் இல்லை.” – என்று கொரோனா தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா  தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தொடர்பான தகவல்களை நாம் மறைக்கவில்லை. பிசிஆர் பரிசோதனை முடிவுகள் கிடைத்தகையோடு ஊடகங்கள்வாயிலாக அவற்றை வெளிப்படுத்திவருகின்றோம்.சிலவேளை தாமதம் ஏற்பட்டால்கூட அங்கு ஒளிவு – மறைவு என்பதற்கு இடமிருக்காது.இலங்கையில் திறமையான ஊடகவியலாளரகள் இருப்பதால் அவ்வாறு எதனையும் மறைக்கவும் முடியாது.

கொரோனா வைரஸ் பரவலை ஆரம்பம் முதலே சிறப்பான முறையில் கட்டுப்படுத்திவருகின்றோம். நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றையும் கருத்திற்கொண்டே தற்போது செயற்படுகின்றோம்.

மினுவாங்கொட கொத்தணி 3 ஆயிரத்து 100 என்ற எண்ணிக்கையுடன் கட்டுக்குள் வந்துள்ளது. பேலியகொட கொத்தணி பரவல்தான் நாடடின் ஏனைய பகுதிகளிலும் வியாபித்தது. அதனையும் கட்டுப்படுத்திவருகின்றோம். எனவே, கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான எமது செயன்முறை ‘பெயில்’ இல்லை (தோல்வி அடையவில்லை). என்றும் நாம் பெயில் அடைந்தது இல்லை. அடையவும் மாட்டோம்.

நாட்டில் சிறந்த தலைவர் இருக்கிறார். அரசாங்கமொன்று இருக்கின்றது. செயலணி இருக்கின்றது. ஓய்வுபெற்ற அதேபோல வெளிநாட்டில் இருக்கும் வைத்தியர்கள் ஒத்துழைப்புகளை வழங்கிவருகின்றனர். எனவே, நாம் தோல்வியடையமாட்டோம்.” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles