நாட்டில் மேலும் 159 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பேலியகொடை தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த 151 பேருக்கும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்த ஒன்பது பேருக்குமே இவ்வாறு வைரஸ் தொற்றியுள்ளது.
இதன்படி இலங்கையில் கொரோனா 2ஆவது அலைமூலம் பதிவான மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 500 ஐ தாண்டியுள்ளது. இன்று இதுவரையில் 443 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 187 ஆக அதிகரித்துள்ளது.