‘கொரோனா’ – 6,005 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சை! 117 பேர் குணமடைவு!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருபவர்களில் மேலும் 117  பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதன்படி இலங்கையில் கொரோனாவின் பிடிக்குள் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,399 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 6 ஆயிரத்து 5 490 பேருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிக்கப்பட்டுவருகின்றது. கொரோனாவால் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் கடந்த மார்ச் மாதம் முதல் இற்றைவரை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 424 ஆக அதிகரித்துள்ளது.

Related Articles

Latest Articles