கொழும்பிலிருந்து கெட்டபுலா தோட்டம் வந்த பெண்ணுக்கு கொரோனா!

நாவலப்பிட்டிய கெட்டபுலா நடுப்பிரிவு தோட்டத்தில் இன்று (6) கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து கடந்த 25ஆம் திகதி வீட்டுக்கு வந்துள்ள பெண்ணொருவருக்கே பிசிஆர் பரிசோதனைமூலம் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிடமும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

Related Articles

Latest Articles