சஜித் – சந்திரிக்கா அவசர சந்திப்பு!

எதிர்க் கட்சித்தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்கவுக்குமிடையிலான விஷேட சந்திப்பொன்று இன்று (23) இடம்பெற்றது.

உலகம் பூராகவும் பரவிக்கொண்டிருக்கும் கொரோனா அச்சுறுத்தல் தொடர்பாக இதன்போது விஷேட அவதானம் செலுத்தப்பட்டது.

நாடளாவிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் பாரிய அளவில் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பரவலுக்கு மத்தியில் எதிர்நோக்கியிருக்கும் சவால்கள் குறித்தும், அதனை வெற்றி கொள்வதற்குரிய வழிமுறைகள் குறித்தும் கலந்துரையாடலுக்குட்படுத்தப்பட்டது.

அதே போன்று இலங்கைக்குப் பொருத்தமான தேசிய சுற்றாடல் கொள்கை வகுப்பின் தேவைப்பாட்டின் முக்கியத்துவம் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டதோடு,சர்வதேச ரீதியாக ஏற்ப்பட்டிருக்கும் காலநிலை மாற்றம் தொடர்பாகவும் இதன் போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

Related Articles

Latest Articles