சிறிகொத்தவை கைப்பற்றும் எண்ணத்தை கைவிட்டது சஜித் அணி

” அரசியல் சமரில் ஈடுபட்டு சிறிகொத்தவை கைப்பற்றுவதற்கு நாம் தயாரில்லை. எனவே, தலைமைப்பதவியை ஏற்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி சஜித் பிரேமதாவுக்கு அழைப்பு விடுக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் அக்கட்சி உறுப்பினர்களுக்கு அரசியல் எதிர்காலம் என்பது இருக்காது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருணாகலை மாவட்ட வெற்றி வேட்பாளர் நளின் பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று (17) முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களும், வாக்கு வங்கியும் ஐக்கிய மக்கள் சக்தி வசமே இருக்கின்றது. பொதுத்தேர்தலில் இதனை நாம் உறுதிப்படுத்தினோம். எனவே, ரணில் அணியினர் இனியாவது உறுதியானதொரு தீர்மானத்தை எடுக்கவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் ரணிலுடன் இருக்கும் உறுப்பினர்களுக்கு மாகாணசபைத் தேர்தலில்கூட வெற்றிபெறமுடியாத நிலை ஏற்படும்.
முடியுமானால் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று காட்டுமாறு ரங்கே பண்டார, அகிலவிராஜ், வஜிர உள்ளிட்டோருக்கு சவால் விடுக்கின்றோம். முடியாது. இனி அவர்களுக்கு பிரதேச சபைத் தேர்தலில்கூட வெற்றிபெறமுடியாது.
ஆகவே, ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியை ஏற்குமாறு சஜித்துக்கு ரணில் அணியினர்தான் வலிந்து அழைப்பு விடுக்கவேண்டும். அவ்வாறு விடுக்கப்படும் அழைப்பில்தான் அவர்களின் அரசியல் எதிர்காலம் தங்கியுள்ளது. நாம் வலிந்துசென்று பதவியை கேட்கப்போவதில்லை.
ஐக்கிய மக்கள் சக்தியாக முன்நோக்கி பயணிப்போம். ஐ.தே.கவின் தலைமைப்பதவி வழங்கப்படுமானால் அதனை சஜித் ஏற்று கூட்டாக பயணிக்ககூடியதாக இருக்கும்.
2024 முற்பகுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை இலக்குவைத்து எமது அரசியல் நகர்வுகள் இடம்பெறும். இன்னும் இரண்டு மாதங்களில் சஜித்தின் நேரடி பங்களிப்புடன் கீழ்மட்ட அரசியல் இயந்திரம் கட்டியெழுப்படும். ” – என்றார்.
Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles