‘சுற்றுலாப்பயணிகளுக்காக 21 ஆம் திகதி விமான நிலையங்கள் திறப்பு’

எதிர்வரும் 21 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் சுற்றுலாப் பயணிகளுக்குத் திறக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருவது குறித்து அமைச்சர் மேலும் விளக்கமளித்தார்.

சுற்றுலா வீசாப் பெற்றுக்கொண்டு வெளிநாட்டவர்கள் இலங்கை வர முடியும் என்றும் இதனைத் தவிர இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்கள், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர் இலங்கைக்கு வர முடியும்.

எனினும், அவர்கள் இலங்கை வருவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்னர் பி.சி.ஆர். பரிசோதனை செய்துகொண்டு கொவிட் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் அத்தியாவசியமானது.

இதனைத்தவிர, கட்டுநாயக்க விமான நிலையத்தில் மீண்டும் பி.சீ.ஆர். பரிசோதனை செய்யப்படும் என்றும் அதன் பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள ஓட்டல்களில் அவர்கள் ஒருவாரம் பாதுகாப்பு நடைமுறைகளுடன் தங்கவைக்கப்படுவர்.

இதேவேளை, குறித்த ஓட்டல்கள் சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் என்றும் இவ்வாறு ஒருவார காலத்தின் பின்னர் தேவையெனில் மீண்டும் பி.சீ.ஆர். பரிசோதனை செய்துகொண்ட பின்னர் அவர்கள் இலங்கையில் சுற்றுலாவை மேற்கொள்ளலாம்.

எனினும், சுகாதார நடைமுறைகளுடன் மிகவும் பாதுகாப்பான வழிமுறைகளைப் பின்பற்றி சுற்றுலாப் பயணிகளை அழைத்துவருவோர் அவர்களைக் கையாள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்டவர்களும் மிகவும் பாதுகாப்பான முறையில் அவர்களுக்கான சேவைகளை வழங்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விளக்கமளித்தார்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles