ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட தொல்பொருட்கள் சேதமாக்கப்பட்டமை குறித்த அறிக்கை தாமதமாகலாம்!

ஜனாதிபதி மாளிகையில் காணப்பட்ட தொல்பொருட்கள் சேதமாக்கப்பட்டமை தொடர்பிலான அறிக்கை அரசாங்கத்திடம் கையளிக்கப்படுவது மேலும் சில வாரங்களுக்கு தாமதமாகும் என தொல்பொருள் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில முக்கிய விடயங்கள் குறித்த அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டியிருப்பதே இதற்கான பிரதான காரணம் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

ஜனாதிபதி மாளிகையில் சேதமாக்கப்பட்ட மற்றும் திருடப்பட்ட சொத்துக்கள் தொடர்பான தொல்பொருள் ஆய்வுகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

ஜனாதிபதி மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்களின் செயற்பாடுகள் காணரணமாக அங்குள்ள பல பழங்கால பொருட்கள் சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

Related Articles

Latest Articles