டலஸ் அணி வெத்து வேட்டு! தேர்தல் நடந்தால் இது தெளிவாகும்!!

” டலஸ் அணியினர் தொடர்பில் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை. வெத்து வேட்டுகளுக்கு பதிலளித்து எமது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.”

இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

டலஸ் அழகப்பெரும தலைமையிலான அணியினரின் அரசியல் பயணம் தொடர்பில் விபரிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” அவர்களுக்கு மக்கள் பலம் இல்லை. வெத்து வேட்டுகள். தேர்தல் வரும்போது இது உறுதியாகும்.” – எனவும் அவர் விளாசினார்.

Related Articles

Latest Articles