தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுக் கூட்டம் நாளை மறுதினம் 20 ஆம் திகதி பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் உட்பட சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் இதன்போது ஆராயப்படவுள்ளது
அத்துடன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்றகுழுவும் அன்றைய தினம் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.