தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு முன்னர் உள்ளாட்சிசபைத் தேர்தல் நடத்தப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று அறிவித்தார்.
கண்டியில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
புதிதாக வேட்பு மனுக்களை கோருவதற்குரிய சட்டதிருத்தம் ஜனவரியில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.










