தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன் – விராட் கோஹ்லி அறிவிப்பு

ரி – 20 உலக கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியின் ரி – 20 தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக விராட் கோஹ்லி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக விராட் கோஹ்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், ”பொறுப்பிலிருந்து விலகும் முடிவை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மற்றும் தலைவர் கங்குலியிடம் கூறிவிட்டேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்த ரி -20 கேப்டன் பதவியிலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கடந்த சில தினங்களாக பல்வேறு செய்திகள் இது தொடர்பாக வெளியாகி வந்த நிலையில் தற்போது விராட் கோஹ்லி தனது அறிக்கை மூலம் உறுதி செய்துள்ளார்.

Related Articles

Latest Articles