வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளை மையப்படுத்தி “தாமரை” சின்னத்தில் கட்சியொன்றை ஆரம்பிக்க வட மாகாண முன்னாள் முதலமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஷ்வரன் நடவடிக்கை எடுத்து வருவதாக ‘திவயின’ என்ற சிங்கள நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவின் பாரதீய ஜனதாக்கட்சி இலங்கையிலும் நிறுவப்படும் என தகவல் வெளியான நிலையில் அதற்கு விக்கி கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையிலேயே, தாமரை சின்னத்தில் விக்னேஷ்வரன் புதிய கட்சியை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.










