தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க குழுவில் செந்தில் தொண்டமான்

இலங்கையில் சமகாலத்தில் தேவையாக இருக்கும் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க குழுவிற்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆலோசனைக்கமைய, நீதியமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இந்த விசேட குழுவை நியமித்துள்ளார்.

இந்த அதிஉயர் குழுவில் தமிழ் மக்களைப் பிரதிநிதியாக உள்வாங்கப்பட்டுள்ள செந்தில் தொண்டமானுக்கான நியமனத்தை நீதியமைச்சர் அலி சப்ரி வழங்கினார்.

அபிவிருத்தியடைந்துவரும் இலங்கைப் போன்ற நாடுகளில் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் என்பது மிக முக்கிய இடத்தை வகித்துள்ள நிலையில் மேற்கத்தேய நாடுகளும் இந்த விவகாரத்தை வலியுறுத்தி வருகிறது.

பல்லினச் சமூகங்களைக் கொண்ட சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் தேசிய நல்லிணக்கமும், தேசிய ஒருமைப்பாடுமே அந்த நாடுகளை அபிவிருத்திப் பாதையில் இட்டுச் சென்றுள்ளன. இந்த நிலையில், தேசிய ஒருமைப்பாட்டையும், நல்லிணக்கத்தையும் இலங்கையில் கட்டியெழுப்புவதற்கு அதிமுக்கியத்துவம் வாய்ந்த இடத்தைப் பெறுகிறது.

இதற்கமையவே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இந்தக் குழுவை நியமிப்பதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

அத்துடன், இந்தக் குழுவின் அங்கத்தவர்கள் பொறுப்புவாய்ந்து. உயர்நிலை பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டு, உள்வாங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மொழி பேசும் அங்கத்தவர்களில், பிரதமரின் பெருந்தோட்ட இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் மற்றும் மனோ சேகரம் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளார்.

Related Articles

Latest Articles