சர்வதேச மகளிர் தினத்தையொட்டி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மகளிர் தின நிகழ்வுகள் ,இ.தொ.காவின் தலைமையகமான சௌமிய பவனில் நாளை முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
நிர்வாகச் செயலாளர் விஜயலக்மி தொண்டமான் தலைமையில் மேற்படி நிகழ்வுகள் இடம்பெறும் என இ.தொ.காவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந் நிகழ்வில் வரவேற்புரையை மகளிர் இயக்குனர் திருமதி. தேவமாகிரட் நிகழ்த்தவுள்ளார்.
மாவட்ட பிரதிநிதி திருமதி. ஜீவராணி, திருமதி. ராஜேஸ்வரி ஆகியோர்களின் சிறப்புரைகளும் இதில் இடம்பெறவுள்ளன.
இ.தொ.கா. நிர்வாக உபதலைவரும் சட்டத்தரணியுமான கா.மாரிமுத்து, பெருந்தோட்ட சேவையாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் பொ. சிவராஜா, சிரேஷ்ட இயக்குனர் எஸ்.ராஜமணி, கணக்காளர் ஆர்.ரமேஸ் மற்றும் மத்திய காரியாலய உத்தியோகஸ்தர்களும் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.
பல்வேறு கலாசார நிகழ்வுகளும் இதில் இடம் பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.










