இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸிற்கும், சர்வதேச பொது சேவைகள் சம்மேளனத்திற்கும் (Public Service International) இடையேயான சந்திப்பு இ.தொ.காவின் தலைமையகமான சௌமிய பவனில் இன்று நடைபெற்றது.
இளம் தொழிலாளர் தலைமைகளை உருவாக்குதல், தொழிற்சங்க ரீதியான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதற்கான சர்வதேச உதவிகள், பயிற்சிப்பட்டறைகள், மற்றும் சர்வதேச ரீதியிலான தொழிற்சங்க அங்கீகாரங்கள் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
இ.தொ.காவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் ஆலோசனையின் பிரகாரம் நடைபெற்ற இச்சந்திப்பில் இ.தொ.காவின் நிர்வாக செயலாளர் விஜயலஷ்மி தொண்டமான், பிரதித்தலைவர் அனுஷியா சிவராஜா, உபதலைவர் சிவராஜா
சர்வதேச விவகாரங்களுக்கு பொறுப்பாளரும் உப செயலாளருமான பாரத் அருள்சாமி , தொழிலாளர்களுக்குப் பொறுப்பான ராஜமணியும், பப்ளிக் சேர்வீசஸ் இன்டர்நேஷனல் தென் ஆசிய நாடுகளுக்கான தலைவர் ராமன் கண்ணனும், பிராந்திய செயலாளர் கலாநிதி கோட்சன் அவர்களும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
க.கிஷாந்தன்