தோட்ட அதிகாரியின் அடாவடிக்கு எதிராக தொழிலாளர்கள் போராட்டம்!

தோட்ட அதிகாரியொருவர் , தோட்ட தொழிலாளி ஒருவரை தாக்கியதாக கூறி தோட்ட அதிகாரியின் அடாவடித் தனத்தை கண்டித்து தலவாக்கலை ட்றூப் தோட்ட தொழிலாளர்கள் இன்று (01) பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனியின் கீழ் இயங்கும் தலவாக்கலை ட்றூப் தோட்ட பிரிவுகளான ட்றூப்,கொரின் ,கிளனமோரா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த 400 ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தோட்ட அதிகாரியின் அடாவடித்தனத்தை கண்டித்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

ட்றூப் தோட்டத்தில் அறுவடை செய்யப்படும் தேயிலை கொழுந்துகளை தலவாக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு அரைப்பதற்காக கொண்டு வருவதாகவும், தேயிலை கொழுந்துகளை கொண்டு வரும்போது தேயிலை கொழுந்துகள் திருடப்பட்டுள்ளதாகவும் கூறி தலவாக்கலை தோட்ட அதிகாரி தோட்ட தொழிலாளி ஒருவரை கடந்த (30) திகதி மாலை தாக்கியுள்ளதாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தோட்ட தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தோட்டத் தொழிலாளர்கள் நேற்று (31) முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், தலவாக்கலை தோட்ட அதிகாரி அத்தோட்டத்திலிருந்து இடமாற்றம் செய்யப்படும் வரை பணிப்புறக்கணிப்பு தொடரும் எனவும் தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் தோட்டத் தொழிலாளி தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதோடு லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினம் மாலை நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தோட்ட தொழிலாளியின் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து தலவாக்கலை தேயிலை தொழிற்சாலைக்கு முன்பாக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய தோட்ட அதிகாரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டதாக தலவாக்கலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சமந்த பெரேரா தெரிவித்தார்.

தலவாக்கலை பி.கேதீஸ்

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles