தோழர் அநுர ஜனாதிபதியான பின் கொள்கை மாறிவிட்டதா?

இலங்கையின் பொருளாதாரத்தை பலிகொடுக்கும் எட்கா உடன்படிக்கையை ஜே.வி.பியின் தலைவராக அன்று எதிர்த்த அநுரகுமார திஸாநாயக்க, இன்று ஜனாதிபதியாக பச்சைக்கொடி காட்டியுள்ளமை தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில வலியுறுத்தினார்.

பெரியண்ணாவின் அழுத்தத்துக்கு அடிபணிந்து தனது கொள்கையை ஜனாதிபதி காட்டிக்கொடுத்துவிட்டார எனவும் கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் கம்மன்பில கூறியவை வருமாறு,

“ எட்கா உடன்படிக்கை தொடர்பான பேச்சுகளை தொடர்வதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இணங்கியுள்ளார் என இந்திய வெளிவிவகார அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தை இந்தியாவுக்கு பலி கொடுக்கும் எட்கா உடன்படிக்கை வேண்டாம் என்று அநுரகுமார திஸாநாயக்க கருத்தரங்கு நடத்தி இருந்தார். எட்கா உடன்படிக்கை எவ்வளவு ஆபத்தானது என்பது பற்றியும் அவர் தெளிவாக எடுத்துரைத்திருந்தார்.

அன்று எதிர்த்த எட்கா உடன்படிக்கையை இன்று ஏற்றது ஏன் என்பது பற்றி அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு அல்லாவிட்டால் அன்று பொய்யுரைத்ததற்காக மன்னிப்பு கோர வேண்டும்.

சீபா உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்காக 2008 இல் இந்திய பிரதமராக இருந்த மன்மோகன் சிங், இலங்கை வந்திருந்தார். எனினும், மக்களிடம் இருந்து வந்த எதிர்ப்பால் மஹிந்த ராஜபக்ச குறித்த திட்டத்தை கைவிட்டார். இந்நிலையில்தான் சீபாவைவிட பரந்த விடயங்களை உள்ளடக்கிய எட்கா உடன்படிக்கை 2015 இல் களத்துக்கு வந்தது. இதற்கு எதிராக ஜே.வி.பி. போராட்டங்களைக்கூட நடத்தியது.

இந்தியாவுடனான இணைப்பு திட்டத்தின் தாக்கங்கள் பற்றியும் ஜனாதிபதி தேர்தலின்போது அநுரகுமார திஸாநாயக்க கருத்துகளை வெளியிட்டிருந்தார். ஆனால் இணைப்பு (மின்சாரம், எரிபொருள்) திட்டத்துக்கும் தற்போதைய அரசாங்கம் இணங்கியுள்ளது.

இந்திய அழுத்தங்களுக்கு பணிந்து தமது கொள்கையை ஜனாதிபதி காட்டிக்கொடுத்துவிட்டாரா?” – என்றார்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles