நாட்டில் மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று!

மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய ஊழியர்களுள் மேலும் 220 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது – என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (06) தெரிவித்தார்.

மேற்படி ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய திவுலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு  கொரோனா தொற்று உறுதியானதையடுத்து, அத்தொழிற்சாலையில் ஊழியர்களிடம் பிசிஆர் பரிசோதனை நடத்தப்பட்டுவருகின்றது.

இப்பரிசோதனையின் மற்றுமொரு முடிவு இன்று (6) காலை வெளியானது. இதில் திவுலப்பிட்டிய பெண் பணியாற்றிய ஆடை தொழிற்சாலையில் மேலும் 220 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளமை கண்டறியப்பட்டது. அவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, குறித்த ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிந்த 101 பேர் நேற்று தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

Related Articles

Latest Articles