” பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளினதும் ஆதரவு அவசியம்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
” நிலையானதொரு தேசிய வேலைத்திட்டத்தை ஜனாதிபதி உருவாக்கியுள்ளார். 2048 ஆம் ஆண்டுவரை அந்த வேலைத்திட்டத்துடன் பயணிக்குமாறு அவர் கூறியுள்ளார்.
எனவே, பொருளாதார சமரில் வெல்வதற்கு எமக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஜே.வி.பி, சுதந்திரக்கட்சி உட்பட இந்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் சக்திகளினதும் ஆதரவு அவசியம்.” எனவும் வஜிர குறிப்பிட்டார்.