நானுஓயாவில் இன்று வெடித்து சிதறியது எரிவாயு அடுப்பு!

நானுஒயா பொலிஸ் பிரிவிக்குட்பட்ட நானுஒயா கிலாரண்டன் மேற்பிரிவில் இன்று (7)காலை எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது

இன்று காலை உணவு தயாரிப்பதற்காக எரிவாயு அடுப்பினை செயல்படுத்திய போது குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவ் வெடிப்பு சம்பவத்தில் உயிராபத்துக்களும் , காயங்கள் ஏற்படவில்லை எனவும், சமையலறைக்கும் , சமையல் பாத்திரங்களுக்கும் மாத்திரம் பாதிக்கப்பப்பட்டுள்ளன.

குறித்த வெடிப்பு சம்பவம் தொடர்பாக நானுஒயா பொலிஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

டி.சந்ரு செ.திவாகரன்

Related Articles

Latest Articles