தெற்கு பசுபிக் பிராந்தியத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக நியூஸிலாந்தின் தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் தெரிவித்துள்ளது
குறித்த நிலநடுக்கம் 7.7 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
நியூ கலிடோனியா, பிஜி, வனுவாட்டு போன்ற பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது,
இதனையடுத்து நியூஸிலாந்து வனுவாட்டு பகுதிகளில் மிதமான சுனாமி ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.