நாட்டில் நேற்று மாத்திரம் 975 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 71 ஆயிரத்து 211 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 65 ஆயிரத்து 53 பேர் குணமடைந்துள்ளனர்.
2 ஆவது அலைமூலம் ( பேலியகொட,சிறைச்சாலை கொத்தணிகள்) இதுவரையில் 67 ஆயிரத்து 200 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஐவர் நேற்று உயிரிழந்துள்ளனர். மூன்று ஆண்களும், பெண்கள் இருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 370 ஆக அதிகரித்துள்ளது.