ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களை இலக்குவைத்து பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள் தொடர்ந்தும் சொற்போர் தொடுத்தால், பங்காளிகளின் கன்னத்தில் அறைவதற்குகூட நாம் தயார் – என்று எச்சரிக்கை விடுத்துள்ளார் மொட்டு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அரசுக்குள் இருந்துகொண்டு சுகபோகங்களை அனுபவித்து விமர்சனங்களை முன்வைப்பதைவிட, வெளியில் சென்று முதுகெலும்புடன் விமர்சனங்களை முன்வைப்பதே மேல்.
எங்கள் கட்சி தலைவர்களை தொடர்ந்தும் தாக்கினால், பின்வரிசை எம்.பிக்களாகிய நாம் பங்காளிகளின் கன்னத்தில் அறையக்கூட தயாராகவே இருக்கின்றோம்.” – என்றார்.










