” CPC (இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்) , ஶ்ரீலங்கன், CEB (இலங்கை மின்சார சபை) ஆகியன நாட்டின் வளங்களை ஏற்கனவே அதிகளவில் வீணடித்துள்ளன. அவற்றுக்காக அன்றி, வறியவர் மற்றும் பாதிக்கப்பட்டோரின் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக பாதுகாப்பு என்பவற்றுக்காகவே பணம் தேவைப்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இன்று இவ்வாறு கூறினார்.
