பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திலும் தனிமைப்படுத்தல்

பம்பலப்பிட்டியில் நான்கு பொலிசார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பேலியகொட மீன் சந்தைக்கு அண்மையில் சென்றுவந்த பம்பலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் நான்கு உத்தியோகத்தர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் நெருக்கமாக பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

தற்போது குறித்த பொலிசார் அதிகாரிகள் வேறு எங்கெல்லாம் சென்றார்கள் என்பது குறித்து விசாரிக்கப்பட்ட வருகிறது.

Related Articles

Latest Articles