நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணத்தடை எதிர்வரும் 21 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது என்று இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று அறிவித்தார்.
தற்போதுபோன்று இக்காலப்பகுதியிலும் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முன்னதாக தற்போது அமுலில் உள்ள பயணத்தடை 14 ஆம் திகதி காலை 4 மணிக்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அந்த முடிவு மாற்றப்பட்டு பயணத்தடையை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
,