பரபரப்புக்கு மத்தியில் இன்று கூடுகிறது முற்போக்கு கூட்டணி!

மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற குழு இன்று கொழும்பில் கூடவுள்ளது.

நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில் போட்டியிட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பில் அறுவர் பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் திகாம்பரம், இராதாகிருஷ்ணன், உதயகுமாரும், பதுளை மாவட்டத்தில் அரவிந்தகுமாரும், கண்டியில் வேலுகுமாரும், கொழும்பில் மனோகணேசனும் வெற்றிபெற்றனர்.

எனினும், இரத்தினபுரி, கேகாலை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. அத்துடன், தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு தேசியப்பட்டியல் கிடைக்குமா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பாராளுமன்றக்குழு கூடுகின்றது.

Related Articles

Latest Articles