பழிதீர்த்தது தென்னாபிரிக்கா – 2ஆவது போட்டியிலும் மண்கவ்வியது இலங்கை அணி!

இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்டிலும் தென்னாபிரிக்கா வெற்றிபெற்று தொடரையும் கைப்பற்றியது.

தென்னாபிரிக்கா – இலங்கை அணிகளுக்கிடையிலான 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் கடந்த 3 ஆம் திகதி ஆரம்பமானது.

இதில் முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 157 ஓட்டங்களையும், தென்னாபிரிக்கா 302 ஓட்டங்களையும் எடுத்தன. அடுத்து 145 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2ஆது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி, 2ஆவது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 150  ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3ஆவது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 2-வது இன்னிங்சில் 211 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக 10ஆவது சதத்தை நிறைவு செய்த அணித் தலைவர் கருணாரதன, 103 ரன்களில் (128 பந்து, 19 பவுண்டரி) கேட்ச் ஆனார்.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 67 ஓட்டங்கள் இலக்கை தென்ஆப்பிரிக்க அணி 13.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி எட்டிப்பிடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. இந்த வெற்றியையடுத்து தொடரை தென்ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

2019ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா அணி சொந்த மண்ணில் இலங்கையிடம் 0-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. அதற்கு தற்போது பழிதீர்த்துக் கொண்டது.

Related Articles

Latest Articles