பாராளுமன்றம் வருவாரா பஸில் ராஜபக்ச?

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் பஸில் ராஜபக்ச எப்போது நாடாளுமன்றம் வருவார் என எழுப்பட்ட கேள்விக்கு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல மழுப்பல் போக்கில் பதிலளித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று (27) முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.

இதன்போது 20 ஆவது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் இரட்டை குடியுரிமை கொண்டவர்கள் நாடாளுமன்றம் வருவதற்கான தடை நீக்கும். எனவே, பஸில் ராஜபக்ச எப்போது நாடாளுமன்றம் வருவார் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் கெஹலிய, அது தொடர்பில் அவரிடமும் (பஸில் ராஜபக்ச), ஜனாதிபதியிடமும்தான் கேட்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles