பிரதமர் பதவியை குறிவைக்கிறாரா பிரசன்ன?

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க யானை சின்னத்தில் களமிறங்கினால் அவருக்கு ஆதரவு வழங்கமாட்டேன் – என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

அத்துடன், ஐக்கிய தேசியக்கட்சியில் ஒருபோதும் இணையப்போவதில்லை எனவும் அவர் கூறினார்.

“ அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க பொதுவேட்பாளராக களமிறங்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை. மாறாக ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளராக யானை சின்னத்தில் களமிறங்ககூடாது.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெறுவதற்கு மொட்டு கட்சியின் ஆதரவும் அவசியம். ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கி பிரதமர் பதவியை பெற்றுக்கொள்ளும் நோக்கம் எல்லாம் எனக்கு இல்லை.” – எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles