மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது
புத்தாண்டை முன்னிட்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று (01) விசேட ஊடகவியலாளர் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதில் பங்கேற்று கருத்து வெளியிடுகையிலேயே கட்சி செயலாளர் சாகர காரியவசம் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.
“நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ள வாக்குறுதியின் பிரகாரம் மாகாணசபைத் தேர்தலை இவ்வருடம் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எனினும், தேர்தலை நடத்துவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அஞ்சுகின்றது என்பது புலனாகின்றது. இதனால் தேர்தலை பிற்போடுவதற்குரிய சகல முயற்சிகளும் முன்னெடுக்கப்படக்கூடும்.” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எமது கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக அரசாங்கம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், சட்ட ரீதியாக அவற்றை எதிர்கொண்டு நாம் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் என அவர் மேலும் கூறினார்.
அதேவேளை, தரம் 6 மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடத்திட்டத்தில், வயது வந்தோருக்கான இணையத்தளம் ஒன்றின் முகவரி அச்சிடப்பட்டிருந்த விவகாரம் தொடர்பில் கல்வி அமைச்சரான பிரதமர் பதவி விலக வேண்டும் எனவும் மொட்டு கட்சி வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், இவ்விவகாரம் தொடர்பில் பிரதமர் பதவி விலகவேண்டும் என முன்னாள் அமைச்சர் விமல்வீரவன்சவும் வலியுறுத்தியுள்ளார்.










