புதையல் தோண்ட முயற்சித்த ஏழு பேர் வலப்பனையில் கைது

வலப்பனை கீர்த்திபண்டாரபுர பொலிஸ் பிரதேசத்தில் புதையல் தோண்டும் நோக்கில், வருகை தந்த பௌத்த பிக்கு ஒருவர் உள்ளிட்ட ஏழு பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து மூன்று புத்தர் சிலைகள்,புதையல்,தோண்டப் பயன்படும் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.வலப்பனை கீர்த்தி பண்டாரபுர பகுதியிலுள்ள பொலிஸ் சோதணை சாவடிக்கருகில் சந்தேகத்திற்கிடமாக திரிந்தபோதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் மீது பொலிஸார் விசாரணை நடத்தியதில்,புதையல் தோண்டுவதற்காக வந்ததை ஏற்றுக் கொண்டனர்.

கேகாலையிலிருந்து வருகை தந்த பௌத்த பிக்கு ஒருவர் உட்பட,காலி,மீரிகமை,தம்புளை மற்றும் பக்கமுன பிரதேசத்திலிருந்து வருகை தந்தவர்களே பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.சந்தேக நபர்களையும், கைப்பற்றிய பொருட்களையும் வலப்பனை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles