பொகவந்தலாவையில் கத்திக்குத்து – இளைஞன் காயம்!

பொகவந்தலாவை பஸ் நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதலில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். அவர் பொகவந்தலாவை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றார்.

இச்சம்பவம் இன்று பிற்பகல்வேளையில் இடம்பெற்றுள்ளது.

நோர்வூட் மேல்பிரிவு தோட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.

பொகவந்தலாவ, பெற்றோசோ தோட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரே இத்தாக்குதலை நடத்தியுள்ளார். இவர் பொகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

பொகவந்தலாவை நிருபர் – சதீஸ்

Related Articles

Latest Articles