பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் புர்கா உள்ளிட்ட முகத்தை மூடுவதற்கு எதிராக தடை விதிப்பதற்கு அமைச்சரவையில் அனுமதி கோரப்படும் என்று நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் 2500 வருடம் பழமை வாய்ந்த இலங்கை பௌத்த விகாரை தேவாலய சட்டமூலத்தை ரத்து செய்யவோ அல்லது அந்த சட்டமூலத்தில் திருத்தம் செய்யவோ தான் நீதி அமைச்சராக இருக்கும் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
நீதி அமைச்சில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி சட்டத்தரணியும் நீதி அமைச்சருமான அலி சப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்து சட்டம் மூலத்தில் திருத்தங்களை செய்வதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடந்த நவம்பர் மாதம் அமைச்சரவையில் சமர்ப்பித்து உள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
இந்த புதிய திருத்தத்தின் மூலம் திருமணம் முடிக்கும் குறைந்தபட்ச வயதெல்லை 18 ஆக இருக்க வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதனைத் தவிர திருமணத்தின் போது பெண் கையெழுத்திட வேண்டும் என்ற திருத்தமும் செய்யப்பட்டுள்ளது என்று நீதி அமைச்சர் அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பொது இடங்களில் துர்கா உள்ளிட்ட முகத்தை மூடுவதற்கு எதிராக தடை விதிப்பதற்கு சட்டை ஏற்பாடுகளை செய்வதற்கான யோசனையும் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.