‘பொது சுகாதார பரிசோதகர்களின் கோரிக்கையை நிறைவேற்றவும்’

பொது சுகாதார பரிசோதகர்களின் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பொது சுகாதார பரிசோதகர்கள் கொரோனா தொற்று கடமையிலிருந்து விலகி இருக்க தீர்மானித்திருப்பதாக தெரிவித்திருக்கும் கருத்து தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தலவாக்கலையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

” இன்று உலகம் பூராவும் கொரோனா தொற்று பெரும் அளவில் பரவி வருகின்றது. இலங்கையிலும் கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் கண்டுபிடிக்கப் படுகிறார்கள்.

இவ்வாறான ஒரு சூழ்நிலையில் பொது சுகாதார பரிசோதகர்கள் தங்களுடைய கடமையில் இருந்து விலகி இருப்பது இந்த தொற்று பரவாமல் இருப்பதை தடுப்பதற்கு உகந்த ஒரு விடயமாக நான் கருதவில்லை.

எனவே அரசாங்கம் இவர்களை அழைத்து கலந்துரையாடி இவர்கள் கேட்கும் அந்த அதிகாரங்களை இவர்களுக்கு வழங்கி அவர்களையும் இணைத்துக் கொண்டு இந்த கொரோனா தொடர்பான நடவடிக்கையில் ஈடுபட முடியுமாக இருந்தால் அதுவே வெற்றியான செயல்பாடாக இருக்கும் என நான் கருதுகின்றேன்.

கடந்த காலங்களில் பொது சுகாதார பரிசோதகர்கள் தங்களை அர்ப்பணித்து இந்த கடமையில் ஈடுபட்டதை நாங்கள் காண முடியும் எனவே அனைவரையும் இணைத்துக் கொண்டு இந்த பயணத்தை செல்வோமாக இருந்தால் மாத்திரமே கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

பா.திருஞானம்

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles