” பொருளாதாரக் கொலையாளி நாடு திரும்பும்போது அவருக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுகின்றது. இது எப்படி நடக்கின்றது….”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. இரா. சாணக்கியன் சபையில் இன்று கேள்வி எழுப்பினார்.
” பஸில் ராஜபக்ச நேற்று நாடு திரும்பினார். அவருக்கு விஐபி பகுதியில் வரவேற்பளிக்கப்படுகின்றது. அமைச்சர்கள் படையெடுத்து சென்றனர். பொருளாதாரக் கொலையாளிக்கு எப்படி பொலிஸ் பாதுகாப்பு வழங்க முடியும்?
மற்றுமொரு பொருளாதாரக் கொலையாளி கப்ரால், பொருளாதாரக் கொலையாளி பற்றி புத்தகம் எழுதுவது நகைப்புக்குரிய விடயமாகும்.” – என்றார்.










