பொலிஸாருடன் மோதிய சந்தேகநபர் உயிரிழப்பு

அவிசாவளை, தல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற இரட்டைக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை கையில் வைத்திருந்த கைவிலங்கினால் கழுத்தை நெரிக்க முயற்சித்துள்ளதாக அவிசாவளை தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.                                                                                                                                                                                                      முச்சக்கர வண்டியில் பயணித்த இருவரை சுட்டுக் கொன்று இருவரை படுகாயப்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய இளைஞனின் வாக்குமூலத்தின் அடிப்படையில் இன்று (15) அதிகாலை
,பொலிசார், அவிசாவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மணியம்கம ஏத்பந்திய வீதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர், அங்கு சந்தேக நபருக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.                                                                பின்னர், பொலிஸார் அதை தடுக்க முயன்றனர், இதில் சந்தேக நபர் பலத்த காயமடைந்துள்ளார்

காயமடைந்த சந்தேக நபர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், அவர் உயிரிழந்தே காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது                                                                                                                                                              காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

Latest Articles