நாடாளுமன்றத்தில் நடைபெறும் ஜனாதிபதித் தேர்வுக்கான தேர்தலில் இருந்து விலகுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று அறிவித்தார்.
தமது கட்சியும், கூட்டணியும் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு வழங்கும் எனவும் அவர் கூறினார்.
ஜனாதிபதித் தேர்தலில் டலஸ் அழகப்பெரும பெற்றி பெற்றால், சஜித் பிரதமர் என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
