” ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்க முடியாவிட்டால் ராஜித சேனாரத்ன கட்சியிலிருந்து வெளியேறலாம்.” – என்று ஐ.ம.சவின் செயற்குழு உறுப்பினரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்தார்.
” ராஜித சேனாரத்ன எம்முடன் இணைந்து செயற்பட்டவர். எனினும், கட்சியில் இருந்து வெளியேறுவதுபோன்ற அறிவிப்புகளை ஊடகங்களுக்கு வெளியிட்டுவருகின்றார்.
ஒன்று கட்சியில் இருக்க வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் வெளியேற வேண்டும். அப்போது எம்மால் அடுத்தக்கட்ட நகர்வுகளை முன்னெடுக்க கூடியதாக இருக்கும். ” எனவும் அஜித் பி பெரேரா குறிப்பிட்டார்.










