மக்களுக்காக களமிறங்கும் கட்சியே காங்கிரஸ்!

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட முள்ளுகாமம், லக்ஸபான, வாழமலை, ஸ்ரஸ்பி மற்றும் ஸ்டொக்கம் ஆகிய தோட்டப்பகுதிகளுக்கு இதொகாவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் களப்பயணம் மேற்கண்டார்.

மக்களை சந்தித்து அவர்களின் நலன் பற்றி விசாரித்ததுடன், மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாகவும் கேட்டறிந்துக்கொண்டார்.

குறிப்பாக நாளாந்த சம்பளம், காணி உரிமை, வீடமைப்பு , மக்களின் பொறுளாதார மேம்பாடு தொடர்பாக அமைச்சர் கலந்துரையாடினார்.

மாற்று தொழிற்சங்கங்கள் பெறுந்தோட்ட நிறுவனங்களை கண்டு அஞ்சும் நிலையில்  இ.தொ.கா மாத்திரமே மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றி வருதாகவும், எக்கட்டத்திலும் சமூகத்திருடன் இணைந்து நிற்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மக்களால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுள், உடனடியாக தீர்க்கப்படக்கூடிய பிரச்சினைகளை விரைவில் தீர்க்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் அவர்கள் ஆலோசனை வழங்கினார்.

இம்மக்கள் சந்திப்பில் இ.தொ.கா தேசிய அமைப்பாளர் சக்திவேல், சிரேஷ்ட இயக்குனரும் தொழிற்சங்க தேசிய அமைப்பாளருமான லோகதாஸ், முன்னாள் மஸ்கெலியா பிரதேச சபை தலைவர் சென்பகவள்ளி, அமைச்சரின் ஒருங்கினைப்பு செயலாளர் அர்ஜுன் ஜெயராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி தயாளன் உட்பட பொது மக்கள் என பலர் கலந்துக்கொண்டனர்.

Related Articles

Latest Articles