மதம் மாற்றப்பட்டவர்களை சொந்த மதங்களுக்கு மீட்க புதிய திட்டம்

மதம் மாற்றப்பட்டவர்களை சொந்த மதங்களுக்கு மீட்க புதிய திட்டம் ஞானசார தேரரைச் சந்தித்து செந்தில் பேச்சு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, பிரதமரின் பெருந்தோட்ட இணைப்பாளரும், பதுளை மாவட்ட இணைப்பாளருமான செந்தில் தொண்டமான் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அண்மையில் பொருளாதார வசதிக்காக பிற மதங்களுக்கு மாற்றப்பட்ட மக்களை சொந்த மதத்திற்க்கு மீட்டெடுப்பதற்கான புதிய திட்டங்களை உருவாக்குதல் தொடர்பாகவும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

அத்துடன், இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடையிலான கலாசார மேம்பாடு குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் ஊவா மாகாணத்தில் பொருளாதார பிர்ச்சனைகளை இலக்காக வைத்து சொந்த மதங்களில் இருந்து வேறு மதங்களுக்கு மாறும் செயற்பாடுகளை தடுக்கும் வகையில் வேலைத்திட்டங்களை செந்தில் தொண்டைமான் மேற்கொண்டுவந்த நிலையில், இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

Related Articles

Latest Articles