கொரோனா வைரஸ் தாக்கத்தால் மத்திய மாகாணத்தில் கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி முதல் இன்று காலை 6 மணிவரை 9 ஆயிரத்து 577 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.
இதன்படி நுவரெலியா மாவட்டத்தில் 1,187 பேருக்கும், கண்டி மாவட்டத்தில் 6,072
பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 1,818 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது. இவர்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை குணமடைந்துள்ளனர்.
அதேவேளை, கண்டி மாவட்டத்தில் நேற்று மாத்திரம் 58 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 50 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 104 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.
இதற்கிடையில் மலையகத்தில் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதால், சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்றுமாறு பொது மக்களிடம் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
க.கிசாந்தன்
