மத்திய மாகாணத்தில் ஜுன் முதலாம் திகதி முதல் இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதியில் 3 ஆயிரத்து 823 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இக்காலப்பகுதியில் கண்டி மாவட்டத்தில் 1,731 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 1,464 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 628 பேருக்கும் வைரஸ் தொற்றியுள்ளது.











