அநுராதபுரம் – கண்டி பிரதான வீதியில் கவரக்குளம் பகுதியில் பாரிய மரமொன்று முறிந்து விழுந்ததில் இரு பொலிஸ் அதிகாரிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.
கடும் காற்று காரணமாக குறித்த மரம் முறிந்து விழுந்துள்ளது என தெரியவருகின்றது.
பொலிஸ் மோட்டார் சைக்கிளில் இருந்த இரு அதிகாரிகளும் படுகாயம் அடைந்துள்ளனர்.
காயமடைந்த இரு பொலிஸ் அதிகாரிகளும் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருpன்றனர்.
