மலையக பெருந்தோட்ட மக்களுக்கான தனி வீட்டுத் திட்டத்துக்கு மேலதிகமாக 3 பேர்சஸ் காணியை வழங்குவதற்கு அமைச்சரவை அமதி வழங்கியுள்ளது.
ஏற்கனவே 07 பேர்சஸ் காணி ஒதுக்கப்பட்டுவந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் வேண்டுகோளுக்கு இணங்க இனிவரும் காலப்பகுதியில் 10 பேர்ச்சஸ் காணியிலேயே வீடுகள் அமையவுள்ளன.
கால்நடை வளர்ப்பு மற்றும் வீட்டுத் தோட்டத்தை முன்னெடுப்பதற்காகவே மேலதிகமாக 3 பேர்ச்சஸ் காணி வழங்கப்படவுள்ளது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜீவன் தொண்டமானின் கோரிக்கையை ஏற்று, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்சவே குறித்த பத்திரத்தை அமைச்சரவையில் நேற்று முன்வைத்துள்ளார்.
