மஹிந்த ஆட்சியில் ‘பொய்’ – நல்லாட்சியிலேயே ‘மெய்’ – ராதா

நல்லாட்சியிலேயே மலையகத்தில் பல அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. மஹிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் அதற்கு இடமளிக்கப்படவில்லை. எனவே, நல்லாட்சியில் எதுவும் நடைபெறவில்லை எனக்கூறப்படுவது பொய்யாகும் – என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான வீ. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஹட்டனில் இன்று (27) இடம்பெற்ற மதியம் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

இந்த அரசாங்கத்துக்கு ஆரம்பத்தில் இருந்த செல்வாக்கு தற்போது இல்லை. 60 வீதத்தால் அது குறைவடைந்திருப்பதை உணரமுடிகின்றது. இவ்வாறு அரசாங்கத்தின் செல்வாக்கு குறைவடைந்திருப்பதால் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி வெற்றிபெறும்.

எனவே, மக்கள் சிந்தித்து வாக்குரிமையை பயன்படுத்தவேண்டும். குடும்ப ஆட்சிக்கு வாக்களிப்பதா அல்லது ஜனநாயகத் தலைவனுக்கு வாக்களித்து, ஜனநாயக ஆட்சியை ஏற்படுத்துவதா என்பது தொடர்பில் மக்கள் தீர்மானம் எடுக்கவேண்டும்.

சஜித் பிரேமதாச என்பவர் ஊழல்அற்ற அதேபோல் நிதானமாக செயற்படக்கூடிய தலைவர் என்பதால் அவர் தலைமையிலான அணிக்கு வாக்களித்து, அதிகூடிய ஆசனங்களை பெறுவதற்கு மக்கள் ஆதரவு வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.

‘சிறிகொத்தவை கைப்பற்றுவோம்’ என்ற கதையானது ரணில் தரப்புக்கும், சஜித் அணிக்கும் இடையிலான உட்கட்சி விவகாரமாகும். ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணியில்தான் நாம் அங்கம் வகிக்கின்றோம். எனவே, உட்கட்சி விவகாரங்கள் தொடர்பில் நாம் கருத்து வெளியிடமுடியாது. அவர்கள்தான் பேசி முடிவுக்குவரவேண்டும்.

அதேவேளை, எங்களுடைய ஆட்சிகாலத்தில்தான் ஏழு பேர்ச்சஸ் காணியுடன் மக்களுக்கு தனி வீடுகள் வழங்கப்பட்டன. கல்வித்துறை கட்டியழுப்பட்டது. பாடசாலைகள் மேம்படுத்தப்பட்டன. இவை கடந்த ஆட்சியில் நடக்கவில்லை என்பதே மெய். நல்லாட்சியில் நடக்கவில்லை எனக் கூறப்படுவது பொய் .” – என்றார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles