மாகாணசபைத் தேர்தலுக்கான திகதி நிர்ணயம்!

மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்தும் திகதியை நிர்ணயிக்கும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என நம்பகரமான அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இதன்படி 2021 பெப்ரவரி முற்பகுதியில் மாகாணசபைத் தேர்தல் நடைபெறலாம் எனவும், பழைய முறைமையின்கீழ் 9 மாகாண சபைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல் இடம்பெறும் எனவும் அவ்வட்டாரங்களில் இருந்து மேலும் தெரியவருகின்றது.

அடுத்த நான்கு மாதங்களுக்கான இடைக்கால கணக்கறிக்கையில் மாகாணசபைகள் அமைச்சுக்கே கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது.

Related Articles

Latest Articles