கம்பளை, உலப்பன மாவில தோட்ட தொழிலாளர்களின் காணிப்பிரச்சனைக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தீர்வு பெற்றுக்கொடுத்துள்ளார்.
கம்பளை, உலப்பன மாவில தோட்ட தொழிலாளர்கள் காலம் காலமாக இதே தோட்டத்தில் தொழில் செய்து வருகிறார்கள். ஆனால் இவர்களுக்கு வீடமைப்பதற்கு கூட ஒரு காணியை தோட்ட நிர்வாகம் வழங்கவில்லை.
இதே சமயத்தில் இதே தோட்டத்தில் சேவை புரியும் சேவையாளர்களுக்கு நிர்வாகம் தோட்ட காணியை திட்டமிட்டு பிரித்து கொடுக்க எடுத்த முயற்சியினால் நிர்வாகத்துக்கு இடையில் முறுகல் நிலை தோற்றுவித்தது .
இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. மக்கள் அவரை நேற்று நேரில் சந்தித்து கலந்துரையாடினர்.
இதனையடுத்து பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்தினரனவுக்கு இது பற்றி அறிவிக்கப்பட்டது. சேவையாளர்களுக்கு காணி பகிரும் திட்டம் இடைநிறுத்தப்பட்டது.
இ.தொ.காவின் உப தலைவர் துரை மதியுகராஜா, உப செயலாளர் பாரத் அருள்சாமி ஆகியோரும் சந்திப்பில் பங்கேற்றனர்.