மறைந்த தலைவர் மாவை சோமசுந்தரம் சேனாதிராஜாவின் இறுதிக்கிரியைகள் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை யாழ். மாவிட்டபுரத்தில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் காலை 8 மணிக்கு ஆரம்பமாகும்.
அதனைத் தொடர்ந்து காலை 10 மணிக்கு அஞ்சலி உரைகள் ஆரம்பமாகும்.
பின்னர் மதியம் ஒரு மணியளவில் மாவிட்டபுரம் – தச்சன்காடு இந்து மயானத்தில் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
